Thursday, July 17, 2008

दिल में हो तुम (Satyamev Jayate)


Hindi Version:


दिल में हो तुम
आंखों में तुम
बोलो तुम्हे कैसे चाहूं
पूजा करून सजदा करून
जैसे कहूं वैसे चाहूं
जानू मेरी जानू जाने जाने जानू

अकेला हूँ में अकेला
तुम्हे फिर दिल ने पुकारा
तुम्हारी यादें सताएं
नही हैं कोई हमारा
दुनिया के ग़म
सहता हूँ में
बिरहा के ग़म सह ना पाऊँ
जानू मेरी जानू जाने जाने जानू

हमेशा देखा यही हैं
मिलन के संग हैं जुदाई
शायद वोह होगा दीवाना
चाहत हैं जिसने बनाई
चाहे जलु चाहे मरो
फिर भी तेरे ग़म में गाउन
जानू मेरी जानू जाने जाने जानू





English Version:

Dil Mein Ho Tum
Ankhoon Mein Tum
Bolo Tumhe Kaise Chahoon
Pooja Karoon Sajada Karoon
Jaise Kaho Waise Chahoon
Jaanu Meri Jaanu Jaane Jaana Jaanu

Akela Hoon Main Akela
Tumhe Phir Dil Ne Pukaraa
Tumhari Yaaden Satayen
Nahi Hai Koi Hamara
Duniya Ke Gham
Sehta Hoon Main
Birhaa Ke Gham Seh Na Paaoon
Jaanu Meri Jaanu Jaane Jaana Jaanu

Hamesha Dekha Yahi Hai
Milan Ke Sang Hai Judaai
Shayad Woh Hoga Deewana
Chahat Hai Jisne Banai
Chahe Jalu Chahe Maro
Phir Bhi Tere Gham Mein Gaaun
Jaanu Meri Jaanu Jaane Jaana Jaanu


(सत्यमेव जयते)


Monday, July 14, 2008

காற்றின் மொழி...


காற்றின் மொழி...
ஒலியா, இசையா..?
பூவின் மொழி...
நிறமா, மணமா..?
கடலின் மொழி...
அலையா, நுரையா..?
காதல் மொழி...
விழியா, இதழா..?
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை...

காற்று வீசும் போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழிகள் கிடையாது
பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது
உலவி திரியும் காற்று உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை...

வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசை தூங்கும் ஜாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில் அசைவுக்கூட மொழியாகும்
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை...


(திரைப்படம்: மொழி)

யாரோ யாருக்குள் இங்கு யாரோ...


யாரோ
யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடையில்லா ஒரு கேள்வி.
உயிர் காதல் ஒரு வேள்வி.
காதல் வாரம் இங்கு நான் வாங்க
கடைக்கண்கள் நீ வீச
கொக்கைப்போல நாள் தோறும்
ஒற்றை காலில் நின்றேன் கண்மணி.


ஊரை வெல்லும் தோகை நானே
உன்னால் இன்று தோற்றுப்போனேன்
கண்ணால் யுத்தமே, செய்தாய் நித்தமே
ஓஹோ, நின்றாய் இங்கு மின்னல் கீற்றாய்
நித்தம் வாங்கும் மூச்சுக் காற்றாய்
உன்னை சூழ்கிறேன், நான் உன்னை சூழ்கிறேன்.
காற்றில் வைத்த சூடம் போல
காதல் தீர்ந்து போகாது
உன்னை நீங்கி உஸ்ணம் வாங்கி
என்னால் வாழலாகாது
அன்பே வா, ஹே...

உந்தன் ஆடை காயப்போடும்
உங்கள் வீட்டு கம்பிக்கொடியாய்
என்னை எண்ணினேன்; நான் தவம் பண்ணினேன்
கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி
எட்டி போய்விடு; இல்லை ஏதோ ஆய்விடும்.
காதல் கொண்டு பேசும் போது
சென்னை தமிழும் செந்தேன் தான்
ஆசை வெள்ளம் பாயும் போது
வங்க கடலும் வாய்க்கால் தான்
அன்பே வா, ஹா...


(திரைப்படம்: சென்னை 600 028)

Sunday, July 6, 2008

எனதுயிரே, எனதுயிரே...


எனதுயிரே
, எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்.
எனதுறவே, எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய்.
நெடுஞ்சாலையில் படும் பாதம்போல்
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே...

இனி இரவே இல்லை கண்டேன் உன்
விழிகளில் கிழக்கு திசை.
இனி பிரிவே இல்லை அன்பே உன்
உளரலும் எனக்கு இசை.
உன்னை காணும் வரையில்
எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்.
கண்ணால் நீயும் அதிலே எழுதிப்போனாய்
நல்ல ஓவியம்.
சிறு பார்வையில், ஒரு வார்த்தையில்
தோன்றுதே நூறு கோடி வானவில்.

மரமிருந்தால் அங்கே என்னை நான்
நிழலென நிறுத்திடுவேன்.
இலை விழுந்தால் ஐயோ என்றே நான்
இருதயம் துடித்திடுவேன்.
இனிமேல் நமது இதழ்கள்
இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே...
நெடுநாள் நிலவும் நிலவின்
கலங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே...
உருவாக்கினாய் அதிகாலையை
ஆகவே, நீ என் வாழ்வின் மோட்ச்சமே...

(திரைப்படம்: பீமா)

இந்த நிமிடம்...


இந்த
நிமிடம், இந்த நிமிடம்
இப்படியே உறையாதா?
இந்த நெருக்கம், இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா?
இந்த மௌனம், இந்த மௌனம்
இப்படியே உடையாதா?
இந்த மயக்கம், இந்த மயக்கம்
இப்படியே நீளாதா?

ஞாபகப் பறவை ஓடுகள் உடைந்து
வெளியே தாவிப் பறக்கிறதே
நீயும் நானும் ஒன்றாய் திரிந்த
நாட்கள் நெஞ்சில் மிதக்கிறதே
ஆயிரம் சொந்தம் உலகில் இருந்தும்
தனிமை என்னை துரத்தியதே
உன்னை காணும் நிமிடம் வரைக்கும்
உடலே பொம்மையாய் கிடக்கிறதே
இதயம் நொறுங்குகிறேன், இதையே விரும்புகிறேன்
இது போடும் பெண்ணே, இறப்பேனே கண்ணே
ஆயிரம் காலம் வாழ்கிற வாழ்க்கை
நிமிடத்தில் வாழ்ந்தேனோ...

கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்கும்
மனிதன் வகுத்த திசையாகும்.
உன் முகம் இருக்கும் திசையே எந்தன்
கண்கள் பார்க்கும் திசையாகும்.
கோடையும் வாடையும் இலையுதிர் காலமும்
இயற்கை வகுத்த நெறியாகும்.
உன்னுடன் இருக்கும் காலத்தில் தானே
எந்தன் நாட்கள் உருவாகும்.
உந்தன் நிழலருகே ஓய்வுகள் எடுத்திடுவேன்.
இது காதல் இல்லை; இது காமம் இல்லை
வேகத்தை தாண்டிய மோகத்தை தாண்டிய
உறவும் இதுதானோ...


(திரைப்படம்: பள்ளிக்கூடம்)

Saturday, July 5, 2008

அன்பே என் அன்பே...


அன்பே
என் அன்பே
உன் விழி பார்க்க இத்தனை
நாளாய் தவித்தேன்;
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்.
கண்களில் கடும் வெயில் காலம்;
உன் நெஞ்சும் குளிர்
பனிக்காலம்;
அன்பில் அடை மழைக்காலம்;
இனி அருகினில் வசப்படும்
சுகம், சுகம்.

நீ, நீ ஒரு நதி அலையானாய்;
நான், நான் அதில் விழும் நிலையானேன்.
உந்தன் மடியில் மிதந்திட வேண்டும்;
உந்தன் கரை தொட்டு பிழைத்திட வேண்டும்;
அலையினிலே பிறக்கும் நதி
கடலினிலே கலக்கும்.
மனதினிலே இருப்பதெல்லாம்
மௌனத்திலே கலக்கும்.

நீ, நீ புது கட்டளைகள் விடுக்க
நான், நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவேனே
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே
எதை கொடுத்தோம்; எதை இழந்தோம்
தெரியவில்லை கணக்கு.
எங்கு தொலைந்தோம், எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு.


(திரைப்படம்: தாம் தூம்)

எந்தன் வானமும் நீதான்...


எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும்
திசையில் வாழ்கிறேனே...
எந்தன் பாதையும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உந்தன் கால்கள் நடந்திடும்
வழியில் வருகிறேனே...
உன் பேச்சில்லே என் முகவரி ;
உன் மூச்சில்லே என் வாழ்வடி;
எந்தன் வாழ்வடி...

நீ நடக்கும்போது உன் நிழலும்
மண்ணில் விழும் முன்னே ஏந்திக்கொள்வேன்.
உன் காதலின் ஆழம் கண்டு கண்கள் கலங்குதே...
உன்னுடைய கால் தடத்தை மழையடித்தால்
குடையொன்றை பிடித்து காவல் செய்வேன்.
உன்னாலின்று பெண்ணானதின் அர்த்தம் புரிந்ததே.
உன் பேச்சில்லே என் முகவரி ;
உன் மூச்சில்லே என் வாழ்வடி;
எந்தன் வாழ்வடி...

ஒரேயொரு வார்த்தையில் கவிதையென்றால்
உதடுகள் உன் பெயரை உச்சரிக்கும்.
என் பேரைத்தான் யாரும் கேட்டால்
உன் பெயர் சொல்கிறேன் .
ஒரேயொரு உடலில் இரு இதயம்
காதலெனும் உலகத்தில்தான் இருக்கும்
நீ இல்லையேல், நான் இல்லையே
நெஞ்சம் சொல்லுதே...
உன் பேச்சில்லே என் முகவரி;
உன் மூச்சில்லே என் வாழ்வடி;
எந்தன் வாழ்வடி...


(திரைப்படம்: வாழ்த்துக்கள்)