Friday, January 23, 2009

Nee Indri Naanum Illai (நீ இன்றி நானும் இல்லை)

நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும் உந்தன் முகம் தான்
வலி கூட இங்கே சுகம் தான்

I don’t exist without you
My love is no false
I see your face all my way
pain can also be pleasure here

தொடுவானம் சிவந்து போகும்
தொலை தூரம் குறைந்து போகும்
கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கி வந்தேனே
இமை உன்னை பிரியமாட்டேன் துளி தூரம் நகரமாட்டேன்,
முகம் பார்க்க தவிக்கிறேன் என் இனிய பூங்காற்றே...

Twilight sky is getting red
Distance is coming down
I come closer to you when you show signs of melting
I will never move out of you
I will not move an inch also out of you
Longing to see your face, my sweet breeze

சாந்தி, சாந்தி, சாந்தி
என் உயிரை உயிராய் நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி
நான் வந்தேன், வந்தேன் உன்னை தேடி.. ஒஹ்ஹ்ஹ்..

Oh Shanti oh Shanti
You carry my life
Why did you move away from me
I came in search for you... oh....

நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
உன்னை காணும், நேரம், வருமாவருமா?
இரு கண்கள் மோட்சம் பெறுமா?

I don't exist without you
My love is no false
When will i see you
When will my eyes feel heavenly?

விரலோடு விழியில் வாடும்
விரைகின்ற காலம் நோகும்
இருந்தாலும் வருகிறேன்
உன் மடியில் நான் தூங்க
என்னை வந்து உரசும் காற்றே
அவளோடு கனவில் நேற்றே
கை கோர்த்து நெருங்கினேன் கண் அடித்து நீ ஏங்க...

Fingers and eyes are getting sore
Flying time also tones / pangs down
Still, I will make it
To take nap on your lap
You will envy me now, gentle breeze
As I came closer to her in my dreams

சாந்தி, சாந்தி, சாந்தி
என் உயிரை உயிராய் நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி
நான் வந்தேன், வந்தேன் உன்னை தேடி.. .. (2)

Oh Shanti oh Shanti
You carry my life
Why did you move away from me
I came in search for you... oh....

Monday, January 19, 2009

Ilangathu Veesuthey (இளங்காத்து வீசுதே)

இளங்காத்து வீசுதே
இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வழிஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேட்குதே

கரும் பாறை மனசுல
மயில் தோகை விரிக்குதே
மழை சாரல் தெளிக்குதே
புள்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே

மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே
புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே

பின்னி பின்னி சின்ன இலையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ண துணி போல
ஒன்னுக்கொன்னுதான் இணைஞ்சி இருக்கு
உறவு எல்லாம் அமைஞ்சி இருக்கு
அள்ளி அள்ளி தந்து உறவாடும்
அன்னைமடி இந்த நிலம் போல
சிலருக்குத்தான் மனசு இருக்கு
உலகம் அதிலே நிலைச்சு இருக்கு
நேத்து தனிமையில போச்சு, யாரும் துணை இல்லை
யாரோ வழி துணைக்கு வந்தால் ஏதும் இணை இல்லை
உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல...


மனசுல என்ன ஆகாயம்
தினந்தினம் அது புதிர் போடும்
ரகசியத்தை யாரு அறிஞ்சா? அதிசயத்தை யாரு புரிஞ்சா?
விதை விதைக்கிற கை தானே
மலர் பறிக்குது தினந்தோறும்
மலர் தொடுக்க நாரை எடுத்து
யார் தொடுத்தா மாலையாச்சு?
ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம்
மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதையெல்லாம்
தாலாட்டு கேட்டிடாமலே, தாயின் மடிய தேடி ஓடும்
மழலைய போல.......