Monday, January 19, 2009

Ilangathu Veesuthey (இளங்காத்து வீசுதே)

இளங்காத்து வீசுதே
இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வழிஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேட்குதே

கரும் பாறை மனசுல
மயில் தோகை விரிக்குதே
மழை சாரல் தெளிக்குதே
புள்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே

மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே
புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே

பின்னி பின்னி சின்ன இலையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ண துணி போல
ஒன்னுக்கொன்னுதான் இணைஞ்சி இருக்கு
உறவு எல்லாம் அமைஞ்சி இருக்கு
அள்ளி அள்ளி தந்து உறவாடும்
அன்னைமடி இந்த நிலம் போல
சிலருக்குத்தான் மனசு இருக்கு
உலகம் அதிலே நிலைச்சு இருக்கு
நேத்து தனிமையில போச்சு, யாரும் துணை இல்லை
யாரோ வழி துணைக்கு வந்தால் ஏதும் இணை இல்லை
உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல...


மனசுல என்ன ஆகாயம்
தினந்தினம் அது புதிர் போடும்
ரகசியத்தை யாரு அறிஞ்சா? அதிசயத்தை யாரு புரிஞ்சா?
விதை விதைக்கிற கை தானே
மலர் பறிக்குது தினந்தோறும்
மலர் தொடுக்க நாரை எடுத்து
யார் தொடுத்தா மாலையாச்சு?
ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம்
மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதையெல்லாம்
தாலாட்டு கேட்டிடாமலே, தாயின் மடிய தேடி ஓடும்
மழலைய போல.......

No comments: