Sunday, July 6, 2008

இந்த நிமிடம்...


இந்த
நிமிடம், இந்த நிமிடம்
இப்படியே உறையாதா?
இந்த நெருக்கம், இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா?
இந்த மௌனம், இந்த மௌனம்
இப்படியே உடையாதா?
இந்த மயக்கம், இந்த மயக்கம்
இப்படியே நீளாதா?

ஞாபகப் பறவை ஓடுகள் உடைந்து
வெளியே தாவிப் பறக்கிறதே
நீயும் நானும் ஒன்றாய் திரிந்த
நாட்கள் நெஞ்சில் மிதக்கிறதே
ஆயிரம் சொந்தம் உலகில் இருந்தும்
தனிமை என்னை துரத்தியதே
உன்னை காணும் நிமிடம் வரைக்கும்
உடலே பொம்மையாய் கிடக்கிறதே
இதயம் நொறுங்குகிறேன், இதையே விரும்புகிறேன்
இது போடும் பெண்ணே, இறப்பேனே கண்ணே
ஆயிரம் காலம் வாழ்கிற வாழ்க்கை
நிமிடத்தில் வாழ்ந்தேனோ...

கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்கும்
மனிதன் வகுத்த திசையாகும்.
உன் முகம் இருக்கும் திசையே எந்தன்
கண்கள் பார்க்கும் திசையாகும்.
கோடையும் வாடையும் இலையுதிர் காலமும்
இயற்கை வகுத்த நெறியாகும்.
உன்னுடன் இருக்கும் காலத்தில் தானே
எந்தன் நாட்கள் உருவாகும்.
உந்தன் நிழலருகே ஓய்வுகள் எடுத்திடுவேன்.
இது காதல் இல்லை; இது காமம் இல்லை
வேகத்தை தாண்டிய மோகத்தை தாண்டிய
உறவும் இதுதானோ...


(திரைப்படம்: பள்ளிக்கூடம்)

No comments: