Saturday, July 5, 2008

அன்பே என் அன்பே...


அன்பே
என் அன்பே
உன் விழி பார்க்க இத்தனை
நாளாய் தவித்தேன்;
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்.
கண்களில் கடும் வெயில் காலம்;
உன் நெஞ்சும் குளிர்
பனிக்காலம்;
அன்பில் அடை மழைக்காலம்;
இனி அருகினில் வசப்படும்
சுகம், சுகம்.

நீ, நீ ஒரு நதி அலையானாய்;
நான், நான் அதில் விழும் நிலையானேன்.
உந்தன் மடியில் மிதந்திட வேண்டும்;
உந்தன் கரை தொட்டு பிழைத்திட வேண்டும்;
அலையினிலே பிறக்கும் நதி
கடலினிலே கலக்கும்.
மனதினிலே இருப்பதெல்லாம்
மௌனத்திலே கலக்கும்.

நீ, நீ புது கட்டளைகள் விடுக்க
நான், நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவேனே
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே
எதை கொடுத்தோம்; எதை இழந்தோம்
தெரியவில்லை கணக்கு.
எங்கு தொலைந்தோம், எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு.


(திரைப்படம்: தாம் தூம்)

No comments: