Saturday, July 5, 2008

எந்தன் வானமும் நீதான்...


எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும்
திசையில் வாழ்கிறேனே...
எந்தன் பாதையும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உந்தன் கால்கள் நடந்திடும்
வழியில் வருகிறேனே...
உன் பேச்சில்லே என் முகவரி ;
உன் மூச்சில்லே என் வாழ்வடி;
எந்தன் வாழ்வடி...

நீ நடக்கும்போது உன் நிழலும்
மண்ணில் விழும் முன்னே ஏந்திக்கொள்வேன்.
உன் காதலின் ஆழம் கண்டு கண்கள் கலங்குதே...
உன்னுடைய கால் தடத்தை மழையடித்தால்
குடையொன்றை பிடித்து காவல் செய்வேன்.
உன்னாலின்று பெண்ணானதின் அர்த்தம் புரிந்ததே.
உன் பேச்சில்லே என் முகவரி ;
உன் மூச்சில்லே என் வாழ்வடி;
எந்தன் வாழ்வடி...

ஒரேயொரு வார்த்தையில் கவிதையென்றால்
உதடுகள் உன் பெயரை உச்சரிக்கும்.
என் பேரைத்தான் யாரும் கேட்டால்
உன் பெயர் சொல்கிறேன் .
ஒரேயொரு உடலில் இரு இதயம்
காதலெனும் உலகத்தில்தான் இருக்கும்
நீ இல்லையேல், நான் இல்லையே
நெஞ்சம் சொல்லுதே...
உன் பேச்சில்லே என் முகவரி;
உன் மூச்சில்லே என் வாழ்வடி;
எந்தன் வாழ்வடி...


(திரைப்படம்: வாழ்த்துக்கள்)

No comments: