Saturday, October 11, 2008

Kanmoodi Thirakkum...

கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்ததுபோல
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாலே...
குடையில்லா நேரம் பார்த்து
கொட்டித் தீர்க்கும் மழையைப்போல
அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாலே...
தெருமுனையை தாண்டும் வரையில்
வெறுநாள் தான் என்றிருந்தேன்
தேவதையை பார்த்ததும் இன்று திருநாள் என்கின்றேன்.
அழகான விபத்தில் இன்று ஐயோ நான் மாட்டிக்கொண்டேன்
தப்பிக்க வழிகள் இருந்தும் வேண்டாம் என்கின்றேன்

உன் பேரும் தெரியாதே, உன் ஊரும் தெரியாதே
அழகான பறவைக்கு பேர் வேண்டுமா
நீயென்னை பார்க்காமல் நான் உன்னை பார்க்கின்றேன்
நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா
உயிருக்குள் இன்னோருயிரை
சுமைக்கின்றேன் காதல் இதுவா
இதயத்தில் மலையின் சுமையை
உணர்கின்றேன் காதல் இதுவா

ஓஹோ... ஓஹோ...

வீதி உலா நீ வந்தால்
தெரு விளக்கும் கண்ணடிக்கும்
வீடுசெல்ல சூரியனும் அடம்பிடிக்குமே
நதியோடு நீ குளித்தால்
மீனுக்கும் காய்ச்சல் வரும்
உன்னை தொட்டு பார்க்கத்தானே
மழை குதிக்குமே
பூகம்பம் வந்தால் கூட (ஓஹோ)
பதறாத நெஞ்சம் எனது (ஓஹோ)
பூ ஒன்று மோதியதாலே (ஓஹோ)
பட்டென்று சரிந்தது இன்று (ஓஹோ)

(திரைப்படம்: சச்சின்)

No comments: