Friday, August 22, 2008

காதல் வைத்து...


காதல் வைத்து
காதல் வைத்து காத்திருந்தேன்.
காற்றில் உந்தன்
குரல் மட்டும் கேட்டிருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்...
காதலெனும் கடலுக்குள்
நான் விழுந்தேன்;
கரையினில் வந்தப்பின்னும்
நான் மிதந்தேன்;
அசைந்தாய் அன்பே அசைந்தேன்...
அழகாய் ஐயோ தொலைந்தேன்...

தேவதை கதை கேட்டப்போதேல்லாம்
நிஜமென்று நினைக்கவில்லை.
நேரில் உன்னையே பார்த்த பின்புநான்
நம்பிவிட்டேன் மறுக்கவில்லை.
அதிகாலை விடிவதெல்லாம்
உன்னை பார்க்கும் மயக்கத்தில்தான்.
அந்தி மாலை மறைவதெல்லாம்
உன்னை பார்த்த கிறக்கத்தில்தான்...

உன்னை கண்ட நாள் ஒளி வட்டம்போல்
உள்ளுக்குள்ளே சுழலுதடி.
உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்
உயிருக்குள் ஒலிக்குதடி.
கடலோடு பேசவைத்தாய்;
கடிகாரம் வீசவைத்தாய்;
மழையோடு குளிக்கவைத்தாய்;
வெயில்கூட ரசிக்கவைத்தாய்...


(திரைப்படம்: தீபாவளி)

No comments: